ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா 13 நாள்கள் நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மாலை திருப்பலி மற்றும் மறையுறை நடைபெற்றது. 12ஆம் திருநாளான்று மாலை ஆராதனையும், இரவு புனித அந்தோணியார் திருவுருவ பவனியும் நடைபெற்றது. திருவிழா தினத்தன்று காலையில் கூட்டுத் திருப்பலியும், புதுநன்மை எடுத்தலும் அதன்பின் விளையாட்டு விழாவும், மாலையில் நற்கருனை ஆசீருக்குப் பின் கொடியிறக்கமும் நடைபெற்றது.
இதில், திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.