கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்க விழா

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக் கூட்டமைப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். திருவனந்தபுரம் இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த இணை ஆலோசகர் அசன்பாக்கிர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
கூட்டமைப்புச் செயலரும், கல்லூரி மாணவருமான ஜோதிபாசு கூட்டமைப்பின் 2017-18ஆம் ஆண்டுக்கான செயல்திட்டம் குறித்து விளக்கினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் வில்ஜூஸ்இருதயராஜன் வரவேற்றார். மாணவி பொன் சர்மிளா நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை துறைப் பேராசிரியர்கள் பிரகாஷ், சங்கரக்குமார், நிவேதா இந்துமதி, ஆண்டனி ஜெப்ரீவாஸ், முத்துகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com