ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடன்குடி தேரியூர் "பெருமாள் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஜெ.கனகராஜ் தலைமை வகித்தார். குரு பூஜை விழாவின் சிறப்புகள், ஆர்எஸ்எஸ் ஆற்றி வரும் அரும்பணிகள், இந்து ஒ ற்றுமை ஆகியவை குறித்து ஆர்எஸ்எஸ் மாநில பொறுப்பாளர் பரமேஸ்வரன் பேசினார்.
தொடர்ந்து அனைவரும் காவிக்கொடியை வணங்கி பூஜை செய்தனர். இதில், பாஜக மாவட்டச் செயலர் ரா.சிவமுருக ஆதித்தன், சேவாபாரதி மாவட்டத் தலைவர் கிருஷ்ணமந்திரம், பாஜக ஒன்றியத் தலைவர் திருநாகரன், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சதீஷ், ஒன்றிய நிர்வாகிகள் அழகேசன், சிவந்திவேல், சின்னத்துரை, மாவட்ட க லை இலக்கிய அணித் தலைவர் சங்கர், பங்குனிபாலன், பரமசிவன்,ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் லிங்கபாண்டி, குமரேசன்,தர்மசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.