ஆறுமுகனேரி இறையடியார் அந்தோணி சூசைநாதர் சுவாமி போதை மறுப்பு மற்றும் மறுவாழ்வு இயக்கம் சார்பாக மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை ஆறுமுகனேரி பங்குத்தந்தை டார்வின் அடிகளார் தொடங்கிவைத்தார். இதில் பங்கேற்றோர் மது ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு கலந்துகொண்டனர். பேரணியில் இறையடியார் அந்தோணி சூசைநாதர் சுவாமி போதை மறுப்பு மற்றும் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர் டால்பின், துணைத் தலைவர் அந்தோணி பாப்பு, செயலர் சுவிஸ்டன்,மதுவிலக்கு சபை உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறை மக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.