ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து ஆலயங்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்செந்தூர் தேரடி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர பொதுச்செயலர் எம்.முத்துராஜ் தலைமை வகித்தார். நகர துணைத்தலைவர் பட்டு இசக்கி, நகரப் பொருளாளர் ஆர். மணி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கே.எஸ். மாணிக்கவாசகம், மாவட்ட பொதுச்செயலர் பெ.சக்திவேலன், தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.எஸ்.சுந்தரவேல், பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், இந்து முன்னணி மாவட்டச் செயலர் சிங்காரபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலர் ஆர்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.