இளைஞரை மிரட்டிய தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே இளைஞரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே இளைஞரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டியையடுத்த செண்பகப்பேரி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் வெள்ளைப்பாண்டி(36). இவருக்கும், அதே பகுதி வடக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் கட்டடத் தொழிலாளி தவிடன்(48)  இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு செண்பகப்பேரியில் உள்ள நியாயவிலைக் கடை அருகே நின்று கொண்டிருந்த வெள்ளைப்பாண்டியை தவிடன் அவதூறாகப் பேசி  மிரட்டல் விடுத்தாராம்.  இதுகுறித்து வெள்ளைப்பாண்டி அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து,  தவிடனை திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com