கோவில்பட்டி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவர் நீதிபதி பாபுலால் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாலமுருகன், வழக்குரைஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் நீதிபதி பாபுலால் கலந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்த சிறப்பு சட்டங்கள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
பின்னர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆசிரியர் பழனிகுமார் நன்றி கூறினார்.