குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மாக்காப்பு பூஜை, புதன்கிழமை(ஜூலை26) பிற்பகல் 1 மணிக்கு சந்தனக்காப்பு பூஜை, இரவில் அங்கி சாத்தி பூஜையும், படைப்பு தீபாராதனையும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.