தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் தூத்துக்குடி ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ள மனிதச்சங்கிலி போராட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டணம் வரை ஏறத்தாழ 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 7 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.கே. பூபதி, பகுதிச் செயலர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.