பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணிநாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இந்த விடுப்பு பொருந்தாது. இந்த விடுமுறைக்குப் பதிலாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.