குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றுது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்பு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றுது.
 தலைமைஆசிரியர் ஆ. ஜாண்சன் பால் டேனியல் தலைமை வகித்து குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் செ.ஜெய்சன் பாபு வரவேற்றார். ஆசிரியர் டி. தனராஜ்ஜேக்கப் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அவசியத்தையும், கல்வியின் அவசியத்தையும் பற்றியும், ஆசிரியை எஸ்.ரஜூலா குழந்தைத் தொழிலாளர் இல்லா இந்தியா என்ற தலைப்பிலும் பேசினர். நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் ஜா. ஜெய்சன் சாமுவேல் நன்றி கூறினார்.
 ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜா.ஜெய்சன்சாமுவேல் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com