8 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் தலைமையில் 8 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டம் அய்யனடைப்பு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் திருப்புளியங்குடி, திருச்செந்தூர் வட்டம் சேதுக்குவாய்த்தான், சாத்தான்குளம் வட்டம் கருங்கடல், கோவில்பட்டி வட்டம் செட்டிகுறிச்சி, விளாத்திகுளம் வட்டம் சித்தவநாயக்கன்பட்டி, எட்டயபுரம் வட்டம் குமாரகிரி, ஓட்டப்பிடாரம் வட்டம் கீழமுடிமண் ஆகிய கிராமங்களில் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com