ஆவரையூர் ஸ்ரீசந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஆத்தூர் அருகே ஆவரையூரில் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ஆத்தூர் அருகே ஆவரையூரில் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடக்கநாளன்று தாமிரவருணிநதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாபிஷேக அனுக்ஞை, கணபதி பூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது. இரண்டாம் நாளன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹுதி, அம்பாள் யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கும்பாபிஷேக தினத்தன்று காலையில் பிரதான கும்பபூஜை, கும்பம் புறப்பாடு, அருள்மிகு சந்தனமாரியம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம், கிராம மரியாதை ஆசீர்வாதம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. விழாவில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com