தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2017ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு முதல் கூட்டம் ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், சார்-ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி உதவி ஆட்சியர் ராஜகோபால சுங்கரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பிச்சையா, கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.