பேய்க்குளத்தில் மதுக்கூடத்தில் மது விற்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 55 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பேய்க்குளம் டாஸ்மாக் மதுக்கூடத்தில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை மதுக்கூடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்கப்பட்டு வருவது தெரியவந்தது. அங்கிருந்த 55 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், மதுக்கூட விற்பனையாளர்கள் மீரான்குளத்தைச் சேர்ந்த ஈ.மான்சிங் (28), பழனியப்பபுரத்தைச் சேர்ந்த மு. அந்தோணிராஜ் (44) ஆகியோரை கைது செய்தனர்.