கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே கேட் அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞர் இறந்தார்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் ரயில்வே கேட் அருகேயுள்ள தண்டவாளத்தில் இளைஞர் சடலம் கிடப்பதாக கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரி மற்றும் தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர், வீரவாஞ்சி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் செந்தில்வேல் என்ற செந்தில்குமரன் (34) என்பதும், இவர் தனியார் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இவருக்கு பூமாரி என்ற மனைவியும், பிரவீண் (5) என்ற மகனும், ஜெசிதா (1) என்ற மகளும் உள்ளனர்.
இவர் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலையா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.