"இன்று ரமலான் முதல் நாள்'

ரமலான் முதல் நாள் சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது.

ரமலான் முதல் நாள் சனிக்கிழமை (மே 27) தொடங்குகிறது என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரீ 1438ஆம் ஆண்டின் ரமலான் முதல் நாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பின், அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ இதனை அறிவித்தார். வியாழக்கிழமை மாலை நம் சுற்றுவட்டாரத்தில் பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பிறை பார்க்கப்பட்டதாக தகவல் இல்லை. அவ்வாறு  உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் பெறப்பட்டால் வெள்ளிக்கிழமையை (மே 26) ரமலான் முதல் நாளாகக் கொள்ளலாம். தகவல் கிடைக்கப்பெறவில்லையெனில், ஷஃபான் மாதத்தை 30 நாள்களாகப் பூர்த்தி செய்து, சனிக்கிழமையை (மே 27) ரமலான் முதல் நாளாகக் கொள்ளலாம் என அப்துல் மஜீத் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com