"உணவுப் பொருளில் தரம் குறைவா? கட்செவி அஞ்சலில் புகார் அளிக்கலாம்'

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சிறிய, பெரிய வணிகர்கள் அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் பதிவு அல்லது உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி உணவகங்கள், டீக்கடைகள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட உணவு வணிகர்கள் பதிவு அல்லது உரிமம் பெறவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி வருகிறது. கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் கலப்படம் மற்றும் தரமற்ற பொருள்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் கட்செவி அஞ்சல் மூலம் 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் செய்வதற்கு உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த புகார்கள், மாவட்ட நியமன அலுவலரின் மேற்பார்வையில், அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரங்கள் மாவட்ட நியமன அலுவலரால் தொகுக்கப்பட்டு மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com