சாத்தான்குளம் உரிமையியல் நீதிபதி அசோக்பிரசாத், குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் குற்றவியல் நீதிபதி பணியிடத்தை ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிபதி முருகன் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு சாத்தான்குளம் உரிமையியல் நீதிபதி அசோக்பிரசாத், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியை கூடுதலாக கவனிக்குமாறு பணி வழங்கப்பட்டு, வாரம்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ள நீதிபதி அசோக் பிரசாத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.