நாசரேத்தில் கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் நிறுத்தியிருந்த ஜீப்பை திருடிச்சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாசரேத் கொர்நேலியஸ் தெருவைச் சேர்ந்தவர் இன்பராஜ் (60). கட்டட ஒப்பந்ததாரர். இவர் வியாழக்கிழமை தனது ஜீப்பை வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தார். அவர் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அங்கிருந்த ஜீப்பை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் மீனா வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் ரேணியஸ் ஜேசு பாதம் விசாரணை நடத்தி வருகிறார்.