மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர்கள் பங்காருசாமி, ராமச்சந்திரன், வேல்சாமி, நகரப் பொருளாளர் பிச்சைக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் திருப்பதிராஜா நேருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், நகர மகளிரணித் தலைவி நல்லமதி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொம்பையா, பாலகணபதி, கோபால்சாமி, முருகன், செல்வம், ஜான்வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் சார்பில்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாந்தா குஷி சைல்டு கேர் சென்டர் என்ற திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் பங்கேற்ற குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயசூர்யா தலைமை வகித்து விழாவைத் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி முத்துலட்சுமி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை பாதுகாவலர் சுமித் பர்மன், தலைமை மருத்துவ அதிகாரி கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கான சிறப்பு மேஜிக் ஷோ நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகள் தங்களின் கலாசார திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள், ஸ்டெர்லைட் லேடீஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.