ரேஷன் சீனி விலை உயர்வைக் கண்டித்து தூத்தூர் நியாய விலைக்கடை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்துக்கு தூத்தூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் டிக்கார்தூஸ் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். செல்லசுவாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். கட்சி நிர்வாகி அலெக்ஸ் பேசினார். முன்சிறை வட்டாரச் செயலர் சிதம்பர கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார்.
இதில், கட்சி நிர்வாகிகள் உறுமான்ஸ், மணி, லாசர், சிரிள், தேவதாசன், ஜாண்சன், மரியதாசன், பிரபாகரன், பென்சி, லலிதா, கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடையில் வழங்கப்படும் சீனி விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.