டிச. 2இல் தூத்துக்குடியில் அகில இந்திய செஸ் போட்டி

அகில இந்திய அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடியில் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

அகில இந்திய அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடியில் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
 இதுகுறித்து தூத்துக்குடி சதுரங்க கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  செஸ் விளையாட்டு தரவரிசையில் 1600 புள்ளிகளுக்கு கீழே உள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து தூத்துக்குடி ஸ்பிக்நகரில் அகில இந்திய அளவிலான செஸ் போட்டியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடத்துகிறது.
 இதையொட்டி,  போட்டியாளர்களுக்கு சலுகை விலையில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. போட்டித் தொடர்பான மேலும் விவரங்களை WW​W.​T​U​T​Y​C​H​E​S​S.​C​OM  என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் ஏறத்தாழ 500 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com