அகில இந்திய அளவிலான செஸ் போட்டி தூத்துக்குடியில் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி சதுரங்க கழகத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: செஸ் விளையாட்டு தரவரிசையில் 1600 புள்ளிகளுக்கு கீழே உள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மாவட்ட சதுரங்க கழகமும் இணைந்து தூத்துக்குடி ஸ்பிக்நகரில் அகில இந்திய அளவிலான செஸ் போட்டியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடத்துகிறது.
இதையொட்டி, போட்டியாளர்களுக்கு சலுகை விலையில் உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படுகிறது. போட்டித் தொடர்பான மேலும் விவரங்களை WWW.TUTYCHESS.COM என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் ஏறத்தாழ 500 போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.