தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மீன்வள தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி இக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவர், மாணவிகளுக்கு "எதிர்கால மீன்வளம்' என்ற தலைப்பில் சுவரொட்டி வரையும் போட்டி நடத்தப்பட்டது. அதில், மாணவர் தீரன் முதல் பரிசையும், பாபு கணேஷ் இரண்டாம் பரிசையும், விஷால் மூன்றாம் பரிசையும் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற "மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு'குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 50 மாணவிகள் பங்கேற்று மீன் குஞ்சு பொரிப்பகங்களை பார்வையிட்டனர்.