சாத்தான்குளம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு மற்றும் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.30 மணிக்கு சாத்தான்குளம் அருள்மிகு காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 11.30 மணிக்கு மண்டல பூஜை, நிறைவு பூஜை, இதைதொடர்ந்து அருள்தரும் வீரமனோகரி அம்மன், வெற்றி விநாயகர், சுடலைமாடசுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, கொடை விழா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.