தூத்துக்குடியில் ரூ. 1.05 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
 தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சோதனையின்போது, கணக்கில் வராமல் இருந்ததாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com