திருச்செந்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப்போட்டியில் தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவர்கள் சிறப்பிடத்தை பிடித்தனர்.
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலய பள்ளி மாணவி மு. சுவேதா முதலிடத்தையும், அ. தர்ஷினி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். குழு நடனப் போட்டியில் சுகந்த் குமார், மோனிஷா, பனுவ லோசினி, ராஜேஸ்வரி, விக்னேஷ்வரி, ஐஸ்வர்யா, அபிநய வள்ளி ஆகியோர் இரண்டாமிடத்தைப் பிடித்தனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலர் கு. பழனிசாமி, துணை முதல்வர் ஜெயலட்சுமி அண்ணாமலை, தலைமையாசிரியை விமலா ஆகியோர் பாராட்டினர்.