சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியின் சாலைப் பாதுகாப்புக் குழு மாணவர், மாணவிகளின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியின் சாலைப் பாதுகாப்புக் குழு மாணவர், மாணவிகளின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு பள்ளி நிர்வாக அதிகாரி சுசிலாதேவி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ரதிமுனிஸ்ரீ பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இப்பேரணியில் 15 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தவாறு பங்கேற்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து, பேரணியில் பங்கேற்ற மாணவர், மாணவிகள் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியேற்றனர்.
ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை சாந்தினி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com