காயல்பட்டினத்தில் புன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை மற்றும் அல்அமீன் பள்ளி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு அல்அமீன் பள்ளி நிர்வாகி அபுல் ஹஸன் கலாமீ தலைமை வகித்தார். தாளாளர் புகாரீ வரவேற்றார். புன்னகை மன்றம் குழும நிர்வாகி முஹம்மத் நிஜார் முகாம் அறிமுகவுரையாற்றினார். அரிமா சங்க துணை ஆளுநர் முருகன் முகாமை தொடங்கிவைத்தார். காயல் அமானுல்லாஹ் நன்றி கூறினார்.
முகாமில், திருநெல்வேலிலி அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இயக்குநர் ஜிஜி செல்வன் தலைமையில், அதன் மருத்துவர்கள், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கினர். இதில், 490 பேர் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.