கோவில்பட்டி பகுதியில் அக்டோபர் 21 மின்தடை

கோவில்பட்டி கோட்ட மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.21) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கோட்ட மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.21) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம்.சகர்பான் விடுத்துள்ள அறிக்கை:  மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கோவில்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளான கோவில்பட்டி, புதுக்கிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல் மில் பகுதி, முஹம்மதுசாலிஹாபுரம், இளையரசனேந்தல், அய்யனரி, அப்பனேரி ஆகிய பகுதிகள்,  விஜயாபுரி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட முத்துநகர், சிட்கோ, ஜோதி நகர், புதுரோடு ஆகிய பகுதிகள், எம்.துரைசாமிபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட வானரமுட்டி, காளாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், காளாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்த்தலைவன்பட்டி ஆகிய பகுதிகள், சிவஞானபுரம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவஞானபுரம், வாகைதாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி, செட்டிக்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட செட்டிக்குறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளங்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலக்குறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை   காலை 9 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இதுபோல, எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகள்,  கழுகுமலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட கழுகுமலை, வேலாயுதபுரம், கரடிகுளம், ஓலைகுளம், வெள்ளப்பனேரி, குருவிகுளம் ஆகிய பகுதி,
சன்னதுபுதுக்குடி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியங்குளம், என்.புதூர், நாரைகிணறு, புளியம்பட்டி, சவலாப்பேரி, ஆலந்தா ஒரு பகுதி, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்புதூர், குப்பனாபுரம், பருத்திகுளம், சன்னதுபுதுக்குடி, வடகரை மற்றும் காற்றாலை மின் தொடர் 1, 2 ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (அக்.21)  பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com