சாத்தான்குளம் பள்ளியில் 29இல் மாவட்ட செஸ் போட்டி

சாத்தான்குளம்  வட்ட செஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட  அளவிலான செஸ் போட்டி, டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

சாத்தான்குளம்  வட்ட செஸ் அசோசியேஷன் சார்பில், மாவட்ட  அளவிலான செஸ் போட்டி, டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது.
இப்போட்டி மாணவர்களுக்கு தனியாகவும்,  பொதுப்பிரிவினருக்கு தனியாகவும் நடத்தப்படுகிறது.  மாணவர், மாணவிகளுக்கு 1முதல் 3ஆம் வகுப்பு,  4முதல் 6ஆம் வகுப்பு,  7முதல் 9ஆம் வகுப்பு ,  10முதல் 12ஆம் வகுப்பு என 4 பிரிவாகவும்,  பொதுப்பிரிவினருக்கு 5 பிரிவுகளிலும் நடத்தப்படுகிறது.
சர்வதேச சதுரங்க மாஸ்டர் மனுவேல்  ஆரோன் தலைமை வகித்து தொடங்கிவைக்கிறார். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் 10  இடங்களுக்கும்,  மாணவிகளுக்கு முதல் 6 இடங்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பொதுப்பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் 10  இடங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
இம்மாதம் 28ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் மாணவர், மாணவிகளுக்கு கட்டணமாக ரூ. 80-ம்,  29ஆம் தேதி முன்பதிவு செய்யும் மாணவர்,  மாணவிகளுக்கு ரூ.100 கட்டணமாகவும், பொதுப்பிரிவினருக்கு ரூ.150-முன்பதிவு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9942699500,  9487457322,  9715666246 ஆகிய செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com