நீட் தேர்வுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியினர் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியினர் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் எதிர்மறை அரசியல் செய்வதாகவும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி, பொதுச்செயலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் நாகராஜன், கோட்ட இணைப் பொறுப்பாளர் கணேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ராஜ், செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலர்கள் வீரமணி, சிவராமன், உள்ளாட்சிப் பிரிவு மாவட்டத் தலைவர் பிரபு, விவசாய அணி மாவட்டத் தலைவர் சேதுராஜ், பொதுச்செயலர் ராஜேந்திரன், இளைஞரணித் தலைவர் மாரிச்செல்வம், அமைப்புசாரா அணி மாவட்டத் தலைவர் தேவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com