ஆத்தூர் அருள்மிகு சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
தொடக்கநாளன்று இரவு மாக்காப்பு தீபாராதனையும், இரண்டாம் நாளன்று காலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து யாகசாலை பூஜை, விமான அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் உச்சிகால தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவில் சிறப்பு அலங்கார பூஜையும், கும்ப வீதியுலாவும் நடைபெற்றன.
மூன்றாம் நாளன்று காலையில் படைப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல் மற்றும் கும்ப வீதியுலா, சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. ஏற்பாடுகளை சைவ வெள்ளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.