கோவில்பட்டியில் விவசாய சேவை மையம் திறப்பு

கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் விவசாய சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி மானாவாரி விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் விவசாய சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.
நிறுவன நிர்வாக இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் செல்வராஜன் சேவை மையத்தை திறந்து வைத்தார்.
துணை இயக்குநர் விஜயா, வேளாண் உதவி இயக்குநர் சமுத்திரப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி கிருஷ்ணவேணி குத்துவிளக்கு ஏற்றினார்.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கொடுப்பது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது, பயிர்களின் நோய்களை ஆராய்ந்து அதற்கு உண்டான மருந்துகளை சிபாரிசு செய்தல் உள்ளிட்ட சேவைகள் இங்கு வழங்கப்படுகிறது. இதில், திரளான விவசாயிகள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் நவநீதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com