உடன்குடி டிடிடிஏ பள்ளி மாணவர், தேசிய அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அளவில் 6 மண்டலங்களாக நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் எம்.பாலஅரவிந்த் பங்கேற்று, இரண்டாவது இடம் பெற்றார். இதன் மூலம் அவர் தில்லியில் நடைபெற உள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
மாணவர் பாலஅரவிந்துக்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தங்க மோதிரம் மற்றும் ரொக்கப் பரிசை பள்ளி நலக் குழுத் தலைவர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை வழங்கினார். மாணவர் பால அரவிந்த், என்சிசிஆசிரியர் ஐசக் கிருபாகரன் ஆகியோரை, தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.