சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மழலையர் கொலு அமைத்திருந்தனர்.
இதையொட்டி மாணவ, மாணவிர் எம் மதமும் எம் மதமே என்றும், மனித நேயம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை வலியுறுத்தும் வகையில் அனைத்து மத கடவுள்கள், தேசியத் தலைவர்கள், , சாதனை படைத்தவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் விலங்குகள் போன்று வேடம் அணிந்து கொலுவில் அமர்ந்திருந்திருந்தனர். முதல்வர் ஆ.சண்முகானந்தன் முன்னிலையில், மன நல ஆலோசகர் ஆர்.கணேஷ் கொலு காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்கள் சர்வ சமய பாடல்களையும் பாடினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.