தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தேசிய விருது

உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்திய கடல் வாணிப நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த துறைமுகங்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி, கொச்சியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், உள்நாட்டு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்காக பொதுத்துறை பிரிவின் கீழ் தூத்துக்குடி வஉசி துறைமுகம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.  குரியனிடம் இருந்து வஉசி துறைமுக பொறுப்புக் கழக போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன் விருதை பெற்றுக் கொண்டார்.
துறைமுக உள்கட்டமைப்பு, துறைமுக முணையம் தொடர்பான கட்டணம், நேர சுழற்சி முறை, கையாளும் கட்டணங்கள், வசதிகள் மற்றும் சேவைகள் போன்றவற்றுக்காக வஉசி துறைமுகம் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com