jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 22 லட்சத்தில் மீன் ஏலக்கூடத்துக்கு அடிக்கல்

By DIN  |   Published on : 16th April 2018 09:44 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

தூத்துக்குடியில் ரூ. 22 லட்சம் செலவில் மீன் ஏலக்கூடம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தூத்துக்குடி வஉசி துறைமுகம் சென்ற அவர், அங்குள்ள சிறுவர் பூங்காவில் ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட  அம்பேத்கரின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, துறைமுக குடியிருப்பு பகுதியில் ரூ.2.84 கோடி மதிப்பில் 866.16 சதுர மீட்டர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அந்த வணிக வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் அமைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பழைய  துறைமுகம் அருகே ரூ.80.40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர், தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கும் அலுவலக அறை கட்டுவதற்கும் வஉசி துறைமுகம் சார்பில் ரூ. 17. 42 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
இதையடுத்து, திரேஸ்புரம் முத்தரையர் காலனியில் ரூ. 22 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட உள்ள மீன்வலை பின்னும் கூடம் மற்றும் மீன் ஏலக் கூடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மீனவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்களையும், மீன்பிடி உபகரணங்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார், துணைத் தலைவர் சு. நடராஜன், குமரி துறைமுக சிறப்பு அதிகாரி விஷ்ணு, துறைமுக சபை உறுப்பினர் ராஜகண்ணன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்