தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பல்வேறு போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், ஆசிரியர் பணி தேர்வுகள், வங்கிப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் அண்மையில் நடத்திய குரூப்-2 நேர்முகத்தேர்வு பணிக்கு தேர்வான 103 வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் அவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அகாதெமியில் உள்ள அப்துல்கலாம் நினைவு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அந்தோணி பட்டுராஜ் முன்னிலை வகித்தார். 
 பல்வேறு அரசுப் பணிகளில் பணிபுரியும் ராமச்சந்திரன், வள்ளிகுமரன், வெங்கடேஷன், கனிமுருகன், அருண் சங்கர், பால கோபாலன், சண்முகவேல், கார்த்திக், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது அரசுப் பணியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com