கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர். 

கோவில்பட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்தனர். 
அதிமுக சார்பில்  தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு,  ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்மண்டலச் செயலர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, 
திமுக சார்பில் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலருமான கீதாஜீவன், வீரன் சுந்தரலிங்கம் வெண்கல சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மருதம் மா.மாரியப்பன்,  தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த பரத், பாஜக சார்பில் மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் கதிரேசன் , தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி  திட்டங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பொன்ராஜ், மத்திய, மாநில அரசு எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் சங்க மாநில இணைச் செயலர் சின்னராஜ்,  நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பாசறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், பாமக மாநில துணைப் பொதுச்செயலர் ராமச்சந்திரன் , சமக மாவட்டத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் சுந்தரலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதிய தமிழகம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் அன்புராஜ் தலைமையில், கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து பெண்கள் பால்குடம் எடுத்து வந்து,  சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com