தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில்  கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில்  கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 
கோவில்பட்டியையடுத்த இடைசெவல்  காலனித் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரியப்பன்(39).  வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வந்தவர் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருந்து வந்தாராம். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். 
கடந்த சில நாள்களாகவே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சீதாலட்சுமி பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறாராம்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் சீதாலட்சுமி குடும்பத்தாருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த மாரியப்பன், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து  நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com