அதிமுக வரலாறு தெரிந்து ரஜினி பேச வேண்டும்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

அதிமுக வரலாறு  தெரிந்து ரஜினிகாந்த் பேசினால் நன்றாக இருக்கும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு. 

அதிமுக வரலாறு  தெரிந்து ரஜினிகாந்த் பேசினால் நன்றாக இருக்கும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு. 
கோவில்பட்டியில்  செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:   திராவிட முன்னேற்றக் கழக த்தில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியதன் காரணமாகத்தான் அதிமுக என்ற இயக்கம் தோன்றியது.  
அதிமுக தானாக தோன்றவில்லை. தோற்றுவிக்கப்பட்ட,  உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த வரலாறு எல்லாம் ரஜினிக்குத் தெரியாது. அவர் தெரிந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும்.  
அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆக. 31ஆம் தேதிக்குள் உறுப்பினர் படிவங்களை தலைமை கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்துள்ளனர்.  அப்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை தாண்டி புதிய வரலாறு படைப்போம்.  இடைத்தேர்தலில் மீண்டும் நாங்கள் அதிமுக தான் என நிரூபிப்போம் என்று டி.டி.வி.தினகரன்  சொல்லியிருக்கிறார்.  அதிமுக கொடியும், இரட்டைஇலையும் எங்கே இருக்கிறதோ அதுதான் அதிமுக. அவரே மறைமுகமாக அதிமுகதான் வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்.  அதற்காக அவருக்கு நன்றி.  
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக,  நிச்சயமாக நல்ல தீர்ப்பு வரும்.   உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது நீதிமன்றங்கள் அல்ல. அரசுதான் நடத்தும். உரிய நேரத்தில் நிச்சயமாக தேர்தலை நடத்தும் என்றார் அவர். 
பேட்டியின் போது, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, ரமேஷ், செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com