செங்கல்சூளை இயந்திரத்தில் சிக்கி  இளைஞர் சாவு

நாசரேத் அருகே செங்கல்சூளை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

நாசரேத் அருகே செங்கல்சூளை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கிளாக்குளத்தைச் சேர்ந்தவர் ஞானமுத்து மகன் கவிதன் (25). இவர் ஆழ்வார்திருநகரி அருகே பால்குளத்தில் உள்ள  செங்கல்சூளையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். செங்கல்சூளையில் திங்கள்கிழமை மண்ணை பிசைந்து இயந்திரத்துக்குள் அனுப்பிவிட்டு வெளியே வந்தபோது, அவரது துண்டு கீழே விழுந்ததாம். அதை எடுப்பதற்கு முயன்றபோது இயந்திரத்துக்குள் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இயந்திரத்தில் சிக்கியதில் பலத்த காயமுற்ற அவர் அந்த இடத்திலேயே  உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கவிதனுக்கு நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மனைவி அமுதா, ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com