நாசரேத் மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
நாசரேத்தில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில், நாசரேத் , சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி வட்டார பள்ளி மாணவர், மாணவிகள் பங்கேற்று விளையாடி வந்தனர். இதில், 92 புள்ளிகள் பெற்று சாத்தான்குளம் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டியில் இப்பள்ளி முதலிடம் பிடித்திருந்ததும், தற்போதுள்ள மண்டல அளவிலான கபடி போட்டியிலும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியை அன்பரசியையும், பள்ளி தாளாளர் ரெமிஜியூஸ் அடிகளார், தலைமையாசிரியை அமிர்த ராஜரீகம், உதவித் தலைமையாசிரியை ஐவன் அமலபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியைகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பழைய மாணவிகள் பாராட்டினர்.