திருச்செந்தூரில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்றக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் திருச்செந்தூரில்  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்றக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் திருச்செந்தூரில்  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட இந்து பரிவார் சார்பில் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் ஐ.ரவிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இந்து மகா சபா மாநிலச் செயலர் ஐயப்பன், மாவட்டச் செயலர் ராமர், பாரதிய இந்து வியாபாரிகள் சங்க மாநில அமைப்பாளர் சசிகுமார், இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், நெல்லை மாவட்டச் செயலர் கணேசபாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட பொதுச்செயலர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com