சாத்தான்குளத்தில் டி.என்.டி.டி.ஏ. பி.எஸ்.கே. ராஜரத்னம் சி.பி.எஸ்.இ. பள்ளி புதிய கட்டடப் பணிக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவுக்கு தூத்துக்குடி நாசரேத் திருமண்டில பேராயர் எஸ்.இ.சி தேவசகாயம் தலைமை வகித்தார். திருமண்டில லே செயலர் எஸ்.டி.கே .ராஜன், பள்ளி நன்கொடையாளர் பொறியாளர் ஆர்.ஜெயபிரகாஷ், திருமண்டில உப தலைவர் ஜெ.எஸ்.தேவராஜ் ஞானசிங், உயர்கல்வி நிலவரக்கல்வி செயலர் ஜெ.ஜெபச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தச்சமொழி மருத்துவர் டி.ஆசீர்வாதமனோகரன் வரவேற்றார். சேகரகுருவானர் எம்.பாஸ்கர் அல்பர்ட்ராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார். பேராயர், புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
இதில் திருமண்டில குருத்துவ செயலர் பி.மோசஸ் ஜெபராஜ், பொருளாளர் எஸ்.பொன்துரைராஜ், தாவீது சுந்தரனார் சபை மன்றத் தலைவர் எம்.ஆண்டரூநவராஜ், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தொடர்பு அலுவலர் எஸ்.ஜி.குமாரதாஸ், டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எட்வர்ட் ஆகியோர் பேசினர்.
டி.என்.டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஏ.எஸ். கிருபாகரன் நன்றி கூறினார்.