சாத்தான்குளம் பள்ளியில் "மின் சேமிப்பு' கருத்தரங்கு

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.   

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.   
சென்னை படாளம் கற்பகவிநாயகர் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் பிரிவின் தலைமை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர் கெளதம் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் நோபிள்ராஜ் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். துணை முதல்வர் சந்தனக்குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பங்கராஸ் வரவேற்றார். 
மாணவர்களுக்கு மின் சிக்கனம், சேமிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் பெர்லின் கலா, இம்மானுவேல், சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி நிர்வாக அதிகாரி சாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com