தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார தொடக்க விழா முதுநிலை துணை போக்குவரத்து மேலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. கடலோர காவல் படை கட்டளை அதிகாரி எஸ்.பி. வெங்கடேஷ் விழாவை தொடங்கி வைத்து பேசியது: ஒட்டு மொத்த போக்குவரத்து தளவாடங்களை ஒருங்கிணைப்பதற்கு இணையதளங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், துறைமுக சபை உறுப்பினர் ஆர். ரசல், துறைமுக துணை பாதுகாவலர் கேப்டன் பபாடோஸ் சந்த், மூத்த துணை போக்குவரத்து மேலாளர் எடிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 18 ஆம் தேதி வரை துறைமுக ஊழியர்களுக்கான கட்டுரை, சுலோகம் எழுதும் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியும், துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் துறைமுக அதிகாரிகள் அனைவருக்கும் தனித்தனியாக உற்பத்தி மேம்படுத்துதல் பற்றிய கருத்தரங்கமும் நடைபெறுகிறது.