திருச்செந்தூரில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வுப் பேரணி

திருச்செந்தூரில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூரில் எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, எரிவாயு விற்பனை அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்,  பா.ஜ.க. மாநில வர்த்தக பிரிவு தலைவர் ஏ.என்.ராஜகண்ணன்,  மகளிரணி மாவட்ட பொதுச்செயலர் கு.நெல்லையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலைய அலுவலர் சந்திரசேகரன்,  எரிவாயு சேமிப்பு மற்றும் அதன் பாதுகாப்பான பயன்பாடுகள் பற்றி பொதுமக்களுக்கு செயல் விளக்கமளித்தார். 
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை பாஜக மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் தொடங்கிவைத்தார்.  நிகழ்ச்சியில் எரிவாயு விநியோகஸ்தர்கள்,  பாஜக தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டத் தலைவர் அண்ணாத்துரை,  ஒன்றியத் தலைவர் ஸ்ரீகிருஷ்ணகுமார்,  சட்ட ப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் நாராயணராஜ்,  மாவட்ட விவசாய அணிச் செயலர் செந்தூர்பாண்டியன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முகாமில் 30 பெண்களுக்கு மானிய விலையில் எரிவாயு அடுப்பு மற்றும் உருளை வழங்கப்பட்டது. முன்னதாக அபிராமி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com