நாசரேத்தில் விவசாய கருத்தரங்கம்

நபார்டு வங்கி,  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளை  இணைந்து நாசரேத் சாரோன்  உழவர் மன்றம் சார்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.

நபார்டு வங்கி,  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவை அறக்கட்டளை  இணைந்து நாசரேத் சாரோன்  உழவர் மன்றம் சார்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.
நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளார் விஜயபாண்டியன் தலைமை  வகித்தார்.  நாசரேத் சாரோன் உழவர் மன்றத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பிரகாசபுரம் கிளை மேலாளர் பொன்சேகர்,  விவசாய கடன்கள் குறித்தும்,  சீனிவாசன் சேவை அறக்கட்டளை கள இயக்குநர் சுவாமிநாதன்,  தமிழக விவசாயிகளின் மனப்பக்குவம் குறித்தும்  பேசினர்.
தென்திருப்பேரை வட்டார  உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன்,  இணை வேளாண்மை  அலுவலர் திருப்பாற்கடல்  ஆகியோர் அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.  இக்கருத்தரங்கில் நாசரேத் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.  நாசரேத் சாரோன் உழவர் மன்றச் செயலர் தாமஸ் நன்றி  கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com